109 வயதில் காலமான வேலுப்பிள்ளை ஐயா

புதனற்று இறுதிக்கிரியை நடைபெற்றது

 இலங்கையில் 100 வயதை தாண்டியும் வாழும் சிலரில் ஒருவரான ஓய்வு பெற்ற சிரேஷ்ட வரி மதிப்பீட்டாளரும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் கொழும்புக்கிளையின் போஷகருமான அப்புத்துரை வேலுப்பிள்ளை தனது 109 ஆவது வயதில் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.

02.-01.-1912 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்த இவர் யாழ்ப்பாணக்கல்லூரியில் தன் கல்வியை தொடர்ந்ததுடன் கொழும்பு வெள்ளவத்தையை பின்னாளில் தன் வதிவிடமாகக் கொண்டார், அத்துடன் யாழ்ப்பாணக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையின் மூத்து உறுப்பினராகவும் இருந்து நிர்வாகக் குழுவில் பலவருடங்கள் சேவையாற்றியிருந்தார்.

அமரர் ராஜலக்சுமியின் அன்புக்கணவரான வேலுப்பிள்ளை அமரர் யோகேஸ்வரி,திருநாவுக்கரசு ( கணக்காளர்), சாந்தினி (முன்னாள் பிரதி அதிபர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, - ஓய்வு பெற்ற அதிபர் -சைவ மங்கையர் வித்தியாலயம் ,கொழும்பு)ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்

அன்னாரின் பூதவுடல் கனத்தை இந்து மயானத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

Fri, 04/16/2021 - 06:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை