ரூ. 1,000 வர்த்தமானி அறிவித்தலை இரத்தாக்கும் மனுவின் தீர்ப்பு ஏப். 05

மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்தாக்கக் கோரி தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 05ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது, தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் என்பன தங்களது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பணங்களை முன்வைத்தன. அவற்றை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் ஐந்தாம் திகதி அது தொடர்பான தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Thu, 04/01/2021 - 06:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை