தொழிற்சங்க நடவடிக்கையில் புகையிரத என்ஜின் சாரதிகள்

15 அலுவலக புகையிரதங்களை தவிர அனைத்தும் இரத்து

முறையற்ற வகையிலான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (17) திடீரென முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக உறுதியளித்திருந்த புகையிரத சங்கங்கள், மீண்டும் நள்ளிரவு முதல், ஒரு நாள் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று (18) முற்பகல் 15 அலுவலக சேவைகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதோடு. ஏனைய புகையிரத சேவைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 03/18/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை