அவசரமாகக் கூடுகிறது பிரிட்டன் அரச குடும்பம்

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்கல் வழங்கிய பரபரப்பான தொலைக்காட்சி நேர்காணலை அடுத்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்கும் அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

இந்த பேட்டிக்கு பதில் அளிப்பது தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி கூற அரண்மனை அவசரப்படவில்லை என்று பி.பி.சி அரச குடும்ப செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்ரா வின்பரி தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு அளித்த பேட்டியில் ஹரி மற்றும் மேகன் இருவரும் அரச குடும்பத்திற்குள் இருக்கும் இனவாதம், மனநிலை மற்றும் ஊடகம் தொடர்பில் வெளிப்படையாக கூறியிருந்தனர்.

நவீன வரலாற்றில் பிரிட்டன் அரச குடும்பத்தில் இணைந்த முதல் கலப்பினத்தவராக மேகன் இருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் அவரது குழந்தையின் தோல் நிறம் பற்றி அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் ஹரியிடம் கேட்டதாக மேகன் குறிப்பிட்டார்.

எனினும் மகாராணி அல்லது எடின்பரோ கோமகன் இதனைக் கேட்கவில்லை என்பதை இளவரசர் ஹரி பின்னர் உறுதி செய்துள்ளார்.

Wed, 03/10/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை