'வடக்கு நோக்கிய நட்புறவு பயணம்'

கரித்தாஸ்- கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'வடக்கு நோக்கிய நட்புறவு பயணம்' எனும் தொனிப்பொருளில் தென்மராட்சி - எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள ஆயர் ஜஸ்ரின் தோட்டத்தில் நேற்று காலை மாபெரும் மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கரித்தாஸ் அமைப்பின் யாழ் மாவட்ட இயக்குனர் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கரித்தாஸ் கியூடெக் நிறுவன தேசிய இயக்குனர் மகேந்திர குணதிலக, யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கிருசாந்தி கமலராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் மர நடுகை, சமாதானப் புறாக்களை சுதந்திரமாக பறக்கவிடல், கைப்பணிக் கைத்தொழில் பொருட்களின் கண்காட்சி நிகழ்வு ஆகியன நடைபெற்றன. மேலும் நிகழ்வில் மதகுருமார்கள், 521 மற்றும் 522 படைத் தலைமையகங்களின் தளபதிகள், கரிதாஸ் அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்

 

Wed, 03/10/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை