உய்குர் விவகாரம்: மேற்கு நாடுகள் சீனா மீது தடை

உயிர்குர் முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்கள் தொடர்பில் சீன அதிகாரிகளுக்கு எதிராக பல மேற்குலக நாடுகளும் தடைகளை கொண்டுவந்துள்ளன.

வட மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் உய்குர் மக்களை சீனா முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் நிலையில் அங்கு துன்புறுத்தல், கட்டாய தொழில் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடாவின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் 30 ஆண்டுகளுக்குப் பின், மனித உரிமை மீறல்களுக்காக சீனா மீது நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் முறை.

இதற்கு பதில் நடவடிக்கையாக சீனாவும் ஐரோப்பிய அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 10 தனிநபர்கள், 4 அமைப்புகள் மீது தடைகளைச் சீனா அறிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சீனா, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக இந்த முகாம் பயன்படுத்தப்படுவதாகவும் அங்கு மறுகல்வி புகட்டப்படுவதாகவும் கூறுகிறது.

 

Wed, 03/24/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை