இராணுவத்தினரின் தொழில்துறை வெற்றிடங்களுக்கு தெரிவான இளைஞர், யுவதிகளுக்கு கருத்தரங்கு

இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாகவுள்ள 77வகையான தொழில்சார் துறைகளுக்கு, நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர்களின் பெற்றோர்களைத் தெளிவுபடுத்தும் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இத்தொழில் துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 49இளைஞர், யுவதிகள் உட்பட அவர்களது பெற்றோர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்டவர்களின் ஒழுக்கம் பயிற்சி மற்றும் சம்பளம் அவர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சந்திரபவன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.சிவநேசன் உள்ளிட்ட வளவாளர்களும் இது குறித்த விளக்கங்களை வழங்கினர்.

இலங்கை இராணுவத்தில் நிலவும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிருவாக உதவியாளர் கணினி வன்பொருள் உதவியாளர்,   வைத்திய  உதவியாளர், தாதி மருந்தகர், மின்னியலாளர் உள்ளிட்ட 77வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்கென ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரிவுகளிலிருந்து 49இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டனர். 

இவர்களின் பணிகள் குறித்து விளக்கும் பொருட்டே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச ஊழியர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும். குறைந்த பட்ச சம்பளமாக 50,000 ரூபா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வாச்சிக்குடா விஷேட நிருபர்)

 

Wed, 03/03/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை