குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த, அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பா. உஜாந்தன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.சிவசாந்தன்

 

Fri, 03/05/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை