அதிபரை இடமாற்றக் கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

பூநகரி முக்கொம்பன் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை பாடசாலை முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் பல்வேறு முரண்பாடுகள் இடம் பெற்று வந்த நிலையில் பூநகரிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு மனுக்கள் மூலம் பெற்றோர்கள் தமது கருத்தை தெரிவித்திருந்தனர்.

பூநகரி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பெற்றோர்கள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகள் பாடசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தனர். இவ்வாறான பின்னணியிலேயே மேற்படி போராட்டத்தை பெற்றோர்கள் மேற்கொண்டிருந்தனர். இதன்போது, மாணவர்களை பாடசாலைக்குள் செல்ல அனுமதித்த பெற்றோர் ஆசிரியர்கள் ஒருவரும் பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. வலயக் கல்விப் பணிப்பாளர் நேரில் வந்து தீர்வுகள் தரும்வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

 

Fri, 03/26/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை