கொழும்பு - கதிர்காமம் லேக்ஹவுஸ் கடுகதி பஸ் சேவை விரைவில் ஆரம்பம்

- புதிதாக 02 பஸ்கள் கொள்முதல்

லேக்ஹவுஸ் நிறுவனம் கொழும்பு – கதிர்காமம் – கொழும்பு கடுகதி பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக இரண்டு அசோக் லேலண்ட் பஸ்களை நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது. நேற்று நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட 54 ஆசனங்களைக் கொண்ட இரண்டு பஸ்களையும் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ தயாரட்ண உள்ளிட்ட பணிப்பாளர் சபையினர் பார்வையிட்டனர்.

புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட இரண்டு பஸ் வண்டிகளையும் பரிசீலித்த பின்னர் நிறுவனத்துக்கு கொண்டுவந்து ஏனைய பணிப்பாளர்களுடன் பார்வையிட்டனர். இதன்போது செயற்பாட்டுப் பணிப்பாளர் கணிஷ்க விதாரண, பிரதி பொது முகாமையாளர் சந்தன பண்டார, போக்குவரத்து முகாமையாளர் திஸ்ஸபண்டார உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Thu, 03/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை