நாடளாவிய ரீதியில் தொண்டர்கள் தினம்

வேலைத்திட்டத்திற்கு நாமல் ஏற்பாடு

ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தின் சனிக்கிழமைகளில் தொண்டர்கள் தின வேலைத்திட்டமாக நாடளாவிய ரீதியில் சுயாதீன செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்;

எமது அமைச்சின் ஊடாக அமைப்பு ஒன்றை உருவாக்குவது எமது நோக்கம் அல்ல. எனினும் சுயாதீனமாக நாட்டுக்கும் சமூகத்திற்கும் கிராமப்புறங்களுக்கும் சேவை செய்யும் தரப்பினரை ஒன்றிணைத்துக் கொள்வதே எனது நோக்கம். அதே போன்று அவர்களுக்கான பின்னணியை உருவாக்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். எமது முன்னோர் நாட்டுக்கும் சமூகத்துக்கும் சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்துள்ளனர். அது எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

அதனை மீண்டும் சமூகமயப்படுத்துவதே எமது இலக்கு என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

 

Wed, 03/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை