மஸ்கெலியா குயின்ஸ்லேன் தோட்டத்தில் திடீர் தீ விபத்து

20 குடியிருப்புகள் எரிந்து நாசம்

 

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (குயின்ஸ்லேன் ) ராணித் தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன.  நேற்று (17) பிற்பகல் 02 மணியளவிலே இந் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீப் பரவலை தோட்ட பொதுமக்களும் நிர்வாகமும் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து கடும் பிரயத்தனத்திக்கு மத்தியில் சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் குடியிருப்புகளில் இருந்த அத்தியவசிய பொருட்கள், ஆடைகள், மற்றும் ஆவணங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Thu, 03/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை