தன்சானிய ஜனாதிபதி மகுபுலி காலமானார்

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி தனது 61 ஆவது வயதில் காலமானார் என அந்நாட்டு பிரதமர் சமியா சுலுஹு ஹசன் அறிவித்துள்ளார். இதயப் பிரச்சினைகள் காரணமாக தாரஸ்ஸலாமில் உள்ள மருத்தவமனை ஒன்றில் அவர் கடந்த புதன்கிழமை மரணித்ததாக பிரதமர் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் பொது நிகழ்வுகளில் பங்கேற்காத மகுபுலியின் உடல் நிலை குறித்து வாதந்திகள் பரவி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டபோதும் அது உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பற்றி சந்தேகங்களை வெளியிட்டு வந்தவராகவே மகுபுலி இருந்தார். அந்தத் தொற்றுக்கு எதிராக பிரார்த்திப்பதற்கும் மூலிகையாலான நீராவி சிகிச்சைக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

தன்சானியாவில் 14 நாட்கள் துக்கதினம் அறிவிக்கப்பட்டிருப்பதோடு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

தன்சானிய அரசியல் அமைப்பின்படி பிரதமர் சமியா புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருப்பதோடு கடந்த ஆண்டு ஆரம்பித்த மகுபுலியின் ஐந்து ஆண்டு தவணை முழுவதும் அவர் பதவி வகிக்கவுள்ளார்.

Fri, 03/19/2021 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை