மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். 

நேற்று காலை 09.00மணியளவில் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்னரே சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டரா அல்லது எவராவது கொலை செய்து நீர்த்தேக்கத்தில் வீசி சென்றார்களா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30-−35இடையிலான வயது மதிக்கதக்க பெண் என பொலிஸார் தெரிவித்தனர். 

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.  

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட,   நோட்டன் பிரிட்ஜ், தலவாக்கலை குறூப்  நிருபர்கள் 

  

Fri, 03/26/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை