தொழிற்சாலை கூரையிலிருந்து தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் பலி

தேயிலை தொழிற்சாலையின்  உர களஞ்சியசாலை கூரையிலிருந்து தவறி வீழ்ந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் உர களஞ்சியசாலை கூரை திருத்தம் செய்து கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முன்று பிள்ளைகளின் தந்தையான 39வயதுடைய சுப்ரமணியம் அருணாசலம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று காலை 11.30மணியளவில் கூரைத்திருத்தம் செய்து கொண்டிருந்தவர்  கூரையிலிருந்து உரம் களஞ்சியசாலைக்குள் வீழ்ந்துள்ளார் .நீண்ட நேரத்தின் பின்னர் தொழிற்சாலை காவலாளி கண்டு உடனடியாக டிக்கோயா கிளங்கள்  மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரதேச பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பிரிஜ் நிருபர்

Thu, 03/11/2021 - 15:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை