சிறிதரன் எம்.பியிடம் நேற்றும் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கிளிநொச்சியில் நேற்று (18) மன்னார் பொலிஸ் நிலையத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 03 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி பொத்துவிலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பொலிகண்டியில் நிறைவு பெற்றது.

மன்னார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நேற்று பகல் 12.30 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

Fri, 03/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை