வறிய குடும்பத்துக்கு இராணுவத்தால் வீடு

வட்டுக்கோட்டைப் பகுதியில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தென்னிலங்கையைச் சேர்ந்த சமூக சேவையாளர் குமார் விஜயசூரிய என்பவரால் நன்கொடையாக 10 லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய கட்டளைத் தளபதி பிரியந்த பெரேரா தலைமையில் கீழ் இராணுவ பிரிகேடியர் ஆகியோர் இணைந்து, 4 பெண் பிள்ளைகளுடைய வறிய குடும்பத்திற்கு இவ் வீட்டுத் திட்டத்தை வழங்கினர்.

யாழ்ப்பாணம் குறூப்

 

Sat, 03/20/2021 - 17:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை