சிரேஷ்ட பத்திரிகையாளர் ‘ஷண்’ காலமானார்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ். சண்முகராஜா தனது 85 ஆவது வயதில் நேற்று (02) காலமானார். 55 வருடங்கள் தொடர்ச்சியாக ஊடகத்துறையில் கால்பதித்த சண்முகராஜா சில வாரங்கள் சுகவீனமுற்றிருந்த நிலையில் நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

1935 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் 1955 இலிருந்து கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ‘ஷண்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் சண்முகராஜா கலை, இலக்கியம் , சினிமாத்துறை, தமிழக அரசியல், என பல்வேறு பரிணாமங்களில் தனது ஊடகப்பணியை ஆற்றிவந்தார். 1940 களில் தனது ஆரம்பக் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் ( அன்றைய காலகட்டத்தில் சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்) அதற்கடுத்து யாழ். மத்திய கல்லூரியிலும் பயின்ற ஷண் 1964 ஆம் ஆண்டு முன்னாள் தினகரன் ஆசிரியர் வி.கே. பி. நாகனை ஆசிரியராகக் கொண்டு எம்.டி. குணசேனாவின் இன்டிபென்டன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டிலிருந்து வெளிவந்த ‘‘ராதா’’ சஞ்சிகை மூலம் பத்திரிகைத் துறைப் பயணத்தை ஆரம்பித்தார்.

1966 ஆம் ஆண்டு அதே பத்திரிகை ஸ்பானத்திலிருந்து இலங்கையின் தமிழ்ப் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி, சிந்தாமணி, சூடாமணியிலும் பணியாற்றியவர். கடைசியாக வீரகேசரியிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற போதிலும் இறுதிக்காலம் வரை இவரது ஆக்கங்கள் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றுவதன் மூலம் ஷண் , சஞ்சயன், அன்டர் ஷண் என்ற புனைப்பெயர்களில் வெளிவந்துகொண்டிருந்தது.

Wed, 03/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை