கொரோனா தொற்று: ஏழு வாரங்களே நிறைந்த குழந்தை சிறுவர் வைத்தியசாலையில் மரணம்

பிறந்து 7 வாரங்களே நிறைவடைந்த குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வெலிமடைபிரதேசத்தைச் சேர்ந்த ஏழு வார குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்பதாக மேற்படி குழந்தை வெளிமடை அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு இருதய பகுதியில் தண்ணீர் நிரம்பியுள்ளமைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேற்படி குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்

 அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி குழந்தை கடந்த 5ஆம் திகதி அதிகாலை

3 மணியளவில் லேடிரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/08/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை