புர்கா சட்டமூலத்தை உடனடியாக பாராளுமன்றில் முன்வைக்க திட்டம்

- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என  அவர் தெரிவித்துள்ளார். முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும் என்றும் இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம் என்பதுடன், ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Mon, 03/15/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை