இரணைதீவில் அடக்கம்; இனப் பாகுபாட்டுக்கு வழிவகுக்கலாம்

கிளிநொச்சி, இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்துமென பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ரீல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரவூப் ஹக்கீம், “கிளிநொச்சி, இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும்.

இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானதென நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறது” என பதிவிட்டுள்ளார். இதேவேளை, இந்த விடயம் குறித்து பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், “ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணைதீவை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதை அணுக வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Wed, 03/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை