இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் நேற்று யாழ்ப்பாணம் விஜயம்

நல்லூரில் வழிபாடு; நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு

வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றுக் காலை விஜயம் செய்த அவர், நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்பின்னர், இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ். கலாசார மத்திய நிலையத்திற்குச் சென்று நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்று நூலகத்தைப் பார்வையிட்டதுடன் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

Sat, 03/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை