70 வருட நிறைவு; 7,757 விமானப்படை வீரர்களுக்கு தரமுயர்வு

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமானப் படையின் 7,757 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு தரமுயர்த்தப்பட்டவர்களில்; 467அதிகாரிகளும் 7,290வீரர்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்றைய தினம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் பிரதான மரியாதை அணிவகுப்பு நிகழ்வு விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண தலைமையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

Tue, 03/02/2021 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை