தன்சானியாவில் நெரிசலில் சிக்கிய 45 பேர் உயிரிழப்பு

காலஞ்சென்ற தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலியின் இறுதிக் கிரியையில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி தார் அஸ் சலாமில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கிய 45 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

நகரில் இருக்கும் அரங்கு ஒன்றில் இடம்பெற்ற இறுதிக் கிரியையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவரை ஒருவரை தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றபோதே இந்த நெரிசல் ஏற்பட்டது.

'அதிகம் பேர் அரங்கிற்குள் நுழைய முயன்றதோடு சிலர் பொறுமை இழந்தனர். அவர்கள் தள்ளிக் கொண்டு முன்னோக்கிச் செல்ல முயன்றபோது நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர்' என்று தார் அஸ் சலாம் பிராந்திய பொலிஸ் தலைவர் லசாரோ மம்போசாசா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த உயிரிழப்புகள் பற்றிய முழுமையான எண்ணிக்கை முன்னர் கூறப்படாத நிலையிலேயே அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பெண் ஒருவர் மற்றும் நான்கு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

Wed, 03/31/2021 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை