30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

- டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இதுவரை 05 இலட்சத்து 09 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.    

Wed, 03/03/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை