நாட்டில் கடந்த 24 மணி நேரத்துள் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 15 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர்களில் 06 பேர் பாதசாரிகள் எனவும் 05 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், பாதசாரிகள் மற்றும் வாகன செலுத்துனர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Sat, 03/06/2021 - 06:00
from tkn