வீதி விபத்துக்களில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு

- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வீதி விபத்துக்களில் ஒரே நாளில் 12பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இவ்வாறு 12பேர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் நால்வரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனையவர்களின் முச்சக்கர வண்டிகளில் பயணித்த நால்வரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மேலும் இரண்டு

நபர்களும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு வீதி விபத்துக்கள் அதிகரிப்பதனால் வீதி பாதுகாப்பு செயற்பாடுகளில் பாரதூரமான நிலைமையை எதிர் கொள்ளநேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனமின்மையே  வாகன விபத்துக்கள் அதிகரிப்பதற்கு  காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் பாரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 03/03/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை