1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்போம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பளத்தை எந்த வழியிலாவது பெற்றுக் கொடுப்போம். இது தொடர்பில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட கம்பனி முதலாளிமார்களுக்குமிடையில் இணக்கப்பாடு ஏற்படாததன் காரணமாக, சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 100 ஆவது வருட பூர்த்தி விழா இடம்பெற்றிருந்ததுடன், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

Mon, 03/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை