1000 ரூபா அனுமதி; மலையகத்தில் மக்கள் கொண்டாட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்புடன் நாளாந்த சம்பளமாக 1000ரூபா வழங்க சம்பள நிர்ணய சபையின் பரிந்துரையின் பேரில் தொழில் அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்ட நிலையில் அந்த மகிழ்ச்சியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ, அக்கரப்பத்தன, நுவரெலியா, தலவாக்கலை, நாவலபிட்டி, புசல்லாவ, ரம்போட ஆகிய மலையக பகுதிகளில் நேற்று பூஜை வழிபாடுகளுடன் 1000ரூபா வெற்றியை கேக் வெட்டி பட்டாசு கொளுத்தி கொண்டாடத்தில் ஈடுபட்டார்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த உரிமைகள் உள்ளிட்ட அவர்களின் நாளாந்த வேதனத்தை அன்று முதல் இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியால் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Fri, 03/12/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை