ரூ.1,000 சம்பளப் பிரச்சினைக்கு 15 நாட்களில் நிரந்தர தீர்வு

அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த 1,000 ரூபா சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் சில தினங்களில் இறுதித் தீர்மானம் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. எவ்வாறாயினும் தற்போது 1,000 ரூபா நாளாந்த சம்பளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 10 வருடங்கள் காணப்பட்ட பிரச்சினைக்கு எதிர்வரும் 10 – 15 நாட்களில் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்பதை தெளிவாகக் கூறுகின்றோம். என்றார்.

Wed, 03/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை