ஜப்பான் சுனாமியில் காணாமல்போனவர் உடல் 10 ஆண்டுகளின் பின் மீட்பு

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட கடும் சுனாமியின்போது காணாமல் போன ஒரு பெண்ணின் உடல் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது. பெப்ரவரி 17ஆம் திகதி அப்பெண்ணின் எலும்புக் கூடு மியாகி கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட 61 வயது பெண்மணியான நட்சுகோ ஒகுயாமாவின் எலும்புக் கூடு அது என்று தடயவியல் மற்றும் மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுனாமி ஏற்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னமும் 2500 பேர் வரை காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் உடல்களும் கிடைக்காமல் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் பல குடும்பங்கள் தவிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஒகுயாமாவின் எலும்பைக் கண்டெடுத்தவருக்கு அவரது மகன் கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Sat, 03/06/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை