உயிருக்கு அச்சுறுத்தல் என STF பாதுகாப்பு கோரியவர் ஆர்ப்பாட்டத்தில்

நானே அந்த பாதுகாப்பை நீக்கினேன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு தனது உத்தரவின் பேரில் நீக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விசேட அதிரடிப் படை பாதுகாப்பை பெற்றுக்கொண்ட சுமந்திரன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டதாக சரத் வீரசேகர தெரிவித்தார்.

தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

உண்மையாகவே சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்திருந்தால், அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கமாட்டாரென்றும் அவர் கூறினார்.

Wed, 02/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை