மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவில் இம் முறை கொரோனா தொற்று காரணமாக வெளி மாவட்டத்தவரை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆலய பகுதிகளில் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்தில் இருந்து இம்முறை வருகை தரவுள்ள மக்கள் தமது மாவட்டங்களிலே சிவராத்திரி நிகழ்வை அனுஸ்டிக்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது பாலாவி தீர்த்தக்காவடி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே திருக்கேதீஸ்வரத்திற்கு வருகின்றவர்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றிக்கொள்ள வேண்டும் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இக் கலந்துரையாடலின் போது திணைக்கள தலைவர்கள், திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருக்கள், ஆலய நிர்வாக சபையினர், பொலிசார், சுகாதார துரையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மன்னார் குறூப் நிருபர்
from tkn