ஆர்ப்பாட்ட கண்டன பேரணி களுவாஞ்சிக்குடியை சென்றடைவு

தமிழ் கட்சிகளின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி நேற்று (3) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பித்து நேற்று இறுதியாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் நிறைவடைந்துள்ளது.

பொலிஸார் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது தொடர்பில் சோதனை செய்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து இந் த மூன்று நாள் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறதுடன் இறுதியாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித்தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.(பாறுக் ஷிஹான்)

 

 

Thu, 02/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை