யாழ். புகையிரத நிலையத்தில் படையினர் துப்புரவு பணியில்

டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் நேற்று இராணுவத்தினரால், துப்புரவு பணி முன்னெடுக்கப்பட்டதுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கிருமித் தொற்று மருந்தும் விசிறப்பட்டது.

யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி பிரியந்த பெரோராவின் பணிப்புரைக்கு அமைவாக, யாழ். 512வது படைப்பிரிவின் பிரிகேடியர் தலைமையிலான ,இராணுவ அதிகாரிகள் தலைமையில், இராணுவ சிப்பாய்களினால் இந்த துப்புரவு பணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் புகையிரத அதிபர் பிரதீபன் மற்றும்இராணுவ கட்டளை அதிகாரிகள் எனப் பலர் மேற்பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Tue, 02/09/2021 - 12:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை