'பொத்துவில் – பொலிகண்டி ' மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி

விண்ணதிர கோஷம் எழுப்பி பொலிகண்டி நகரை சென்றடைந்த பேரணி

வடக்கு, கிழக்கில் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வெழுச்சியுடனான பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.

தந்தை செல்வா நினைவிடம், உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோர் தூபி ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்தி போராட்ட பேரணி யாழ்.பல்கலைக்கழகம், நல்லூர் தீயாக தீபம் திலிபன் நினைவிடம் என்பவற்றுக்கு சென்று தொடர்ந்து பொலிகண்டி நோக்கி சென்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில், வடக்கு, கிழக்கு சிவில், சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் இப் பேரணி கடந்த புதன்கிழமை பொத்துவிலில் ஆரம்பமானது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஊடாக 4 ஆவது நாளான நேற்று முன்தினம் கிளிநொச்சியை வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாக தீபம் நினைவுத் தூபி, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றல் ஊடாக பேரணி பருத்தித்துறை வீதி ஊடாக வடமராட்சி மண்ணைச் சென்றடைந்தது. இப் போராட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியுடன் தமது வாழ்வுரிமையை சர்வதேச சமூகத்துக்கு ஒரே குரலில் எடுத்துரைக்கின்றமை சிறப்பு அம்சமாகும். பொலிசாரின் தடைகளையும் மீறி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் குறூப், யாழ்.விசேட நிருபர்கள்

Mon, 02/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை