- அமைச்சர் அருந்திக பெனாண்டோவுக்கு பாதிப்பில்லை
- சாரதி உள்ளிட்ட மூவர் காயம்
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ பயணித்த வாகனமொன்று இன்று (20) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிலாபம் -ஆனமடுவ வீதியில், பல்லம பிரதேசத்திலுள்ள சேருகெலே எனும் இடத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயினும், விபத்தில் அமைச்சர் அருந்திக பெனாண்டோவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி உள்ளிட்ட காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Sat, 02/20/2021 - 15:26
from tkn