யாழில் ரயில் மோதி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (07) முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Mon, 02/08/2021 - 06:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை