தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் அதிகாலை விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் அதிகாலை விடுவிப்பு-Isolation Update-Borella-Minuwangoda-Pugoda-Ambalantota-NOCPC

கொவிட்-19 பரவல் நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொரளை, பூகொட, மினுவாங்கொடை, அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் நாளை (08) அதிகாலை 5.00 மணி முதல்  விடுவிக்கப்படவுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (08) அதிகாலை 5.00 மணியிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

பொரளை பொலிஸ் பிரிவு
- கோத்தமிபுர வீட்டுத் திட்டம்
- 24 தோட்டம் (கோத்தமிபுர)
- 78 தோட்டம் (கோத்தமிபுர)
- வேலுவண வீதி (தெமட்டகொடை

பூகொட பொலிஸ் பிரிவு
- குமாரிமுல்ல கிராம அலுவலர் பிரிவு

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு: கல்ஒலுவ
- கல்ஒலுவ ஜும்ஆ பள்ளி வீதி
- ஹிஜ்ரா மாவத்தை
- அலுத் பார (புதிய வீதி)
- அக்கரகொட

அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- போலான தெற்கு

Sun, 02/07/2021 - 19:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை