இந்திய தூதரகத்தில் ஒருவருக்கு கொரோனா

அறிக்ைக ஊடாக  உறுதிப்படுத்தல்

கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் இந்திய செயலக ஊழியர் ஒருவர் பெப்ரவரி 13 அன்று கொரோனா வைரஸுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் உறுதிப்படுத்தியுள்ளது. தற்சமயம் குறித்த அதிகாரி இலங்கை அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொவிட் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உயர் ஸ்தானிகராலய வளாகங்கள் தற்சமயம் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் நிலையான நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே உயர் ஸ்தானிகராலயம் மட்டுப்படுத்தப்பட்ட வலிமையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன், கொவிட்19 நிலைமையை கருத்தில் கொண்டு பணியாளர்களிடம் சுழற்சி கொள்கையும் பின்பற்றப்படுகிறது.

 

Mon, 02/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை