சுகாதார சேவை நியமனங்களுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களை சுகாதார சேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் சுகாதாரப்பணி உதவியாளர்கள்  நேற்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததுடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர். 

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், 

முறையற்ற வகையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களை விட அனுபவமான பலர், பலவருடங்களாக வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.  

இதேவேளை சுகாதாரபணி உதவியாளர்களாக பணிபுரிந்த பலருக்கு நிரந்தர நியமனங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை.  

தற்போது நியமிக்கப்படவுள்ளவர்களிற்கு அடிப்படை சம்பளம் எங்களை விட அதிகமாக உள்ளது. எனவே இது ஆட்சேர்ப்பு விதிமுறைகளிற்கு எதிரான ஒரு செயற்பாடகவே நாம் பார்க்கின்றோம். எனவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்கப்படும் ஊழியர்கள் சுகாதார துறைக்கு தேவையில்லை. அல்லது அதனை நீதியான முறையில் முன்னெடுக்கவேண்டும் என்றனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே, எமது உரிமையை எமக்குவழங்கு, முறையற்ற நியமனம் வேண்டாம், மனஅமைதியுடன் பணிசெய்யவிடு, கடமை ஒழுங்கை சீர்குலைக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.  

இவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 

இவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 

வவுனியா விசேட, ஓமந்தை விஷேட நிருபர்கள் 

Thu, 02/25/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை