ஆயிரம் ரூபா வழங்க முடியாத இரு கம்பனிகள் அரசினால் சுவீகரிப்பு?

செவ்வாய் பேச்சுக்கு அழைப்பு; இல்லையேல் நடவடிக்கை

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்க முடியாத நிலையில் இருக்கின்ற இரண்டு நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சு செய்தியில் தெரிவித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று கடந்த 8 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை தீர்மானித்திருந்தது.

வேதனத்தை வழங்க மறுக்கும் இரண்டு பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை நாளை செவ்வாய்க்கிழமை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இதன்போது அந்த நிறுவனத்தின் நிதிநிலைமைகள், வருமானம், நட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்து அரசாங்கம் முக்கியத் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

Mon, 02/22/2021 - 08:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை