மாத்தளை மாசி மக உற்சவம் இன்று

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மாசி மக உற்சவம் வழமைபோன்று இம்முறையும் மிகவும் எளிமையான முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றம் நடைபெற்ற  நாள் முதல் வழமையான போன்று தினமும் அம்பாளுக்கு அபிஷேகமும் பூஜைகளும் தவறாது நடைபெற்று வந்தன. மாசி மக உற்சவத்தின் போது வருடாந்தம் இங்கு பஞ்ச ரத பவனி இடம்பெறுவது வழக்கமாகும். இம்முறை நாட்டில் நிலவுகின்ற தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் குறிப்பிட்டளவு எண்ணிக்கையினருடன் இவ்விழாவை நடத்தி வேண்டி இருப்பதால், தேர்த்திருவிழா நடைபெற வேண்டிய இன்றைய தினத்தில் அம்பாள் உள்வீதி வலம் வந்து அருள்பாலிக்கவுள்ளார்.

 

 

 

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை