சுமந்திரனின் எஸ்.ரீ.எப் பாதுகாப்பு நீக்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு கிடைக்கப்பெற்ற விசேட அறிவுறுத்தலின் பிரகாரம் இப் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் சுமந்திரனுக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் இருந்தமை தொடர்பாக தெரியவந்த நிலையிலேயே அவருக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 02/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை