இறந்த நிலையில் கொம்பன் யானை மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரம்பாவெவ கிராம சேவையாளர் பிரிவில் இறந்த நிலையில் கொம்பன் யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் கொம்பன் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து அதிகாரிகள் சென்று இறந்த நிலையில் காணப்பட்ட யானையை மீட்டனர்.

இதன்போது அதிகாரிகள் யானையின் தந்தங்களை வன ஜீவராசிகள் காரியாலயத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இறந்த கொம்பன் யானையின் உடற்கூற்று மரண பரிசோதனைகள் நிகவரட்டிய மிருக வைத்தியசாலையில் இடம்பெற உள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புத்தளம் தினகரன் நிருபர்

Wed, 02/17/2021 - 17:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை