கைதான உறவுகளை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம்

விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் தொடர் போராட்டம் இடம்பெற்றது. நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் ஏ-9 வீதியின் ஊடான போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டன. இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தினை சீர் செய்ய முற்பட்டனர். ஆயினும் போக்குவரத்தினை முழுமையாக சீர் செய்ய முடியாத நிலையில் அதற்கு ஒத்துழைக்குமாறு பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதியின் ஊடான போக்குவரத்து இடம்பெற்றது.​

சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிசார் போராட்டகாரர்களை வீதியிலிருந்து கரைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும் பொலிசாருக்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

பரந்தன் குறூப் நிருபர்

Tue, 02/02/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை