தனது விருப்பத்தையே பிரதமர் முன்வைத்தார்

- நடைமுறை விதியில் எவ்வித மாற்றமுமில்லை

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவேண்டுமென்ற தனது விருப்பத்தையே பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்குவதாக புதைப்பதா என்பது குறித்த இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு 2020 மார்ச் மாதம் வௌியிடப்பட்டது. அதனை மாற்றுவதாக இருந்தால் தொழில்நுட்ப குழுவினால் சுகாதார சேவை பணிப்பாளருக்கு பரிந்துரை முன்வைக்க வேண்டும்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தனது விருப்பத்தினையே பிரதமர் வெளிப்படுத்தினார் என தெரிவித்த அவர், எனினும் இது ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் மாற்றம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவில் மூன்றாம் நபர்கள் அல்லது அரசியல்வாதிகள் தலையிடமுடியாது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை தற்போது காணப்படும் நடைமுறை தொடர்ந்தும் பின்பற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 02/17/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை