முல்லை. குருந்தூர் மலைக்கு பௌத்த தேரர்கள் விஜயம்

முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ச தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டனர்.

இம் மலைப் பகுதியில் பொலிசார் படையினர் கடமைகளில் நின்றபோதும் எந்தவித தடையும் இன்றி தேரர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் பதிவிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள். குருந்தூர் மலையினை பார்வையிட்டு வந்த தேரர்களை படம் எடுக்கவேண்டாம் என்று அங்கு கடமையில் நின்ற பொலிசாரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் தேரர்கள் குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தூர் குளத்தினையும் பார்வையிட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

Mon, 02/01/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை