களுத்தறை தெற்கு புகையிரதத்திற்கு அருகில் புகையிரதமொன்று தடம் புரண்டதால், கரையோர பாதையிலான போக்குவரத்தை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இன்று (03) முற்பகல் களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு வரை பயணித்த புகையிரதமொன்றே இவ்வாறு தடம் விலகியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து பயணிக்கும் புகையிரதங்கள் களுத்துறை - வடக்கு ரயில் நிலையம் வரையும், கொழும்பு செல்லும் புகையிரதங்கள் பயாகல புகையிரத நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்படுவதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
Wed, 02/03/2021 - 10:08
from tkn