கண்டி இராஜியத்தின் இறுதி மன்னனின் நினைவுதினம் வேலூரில் அனுஷ்டிப்பு

கண்டி இராஜியத்தின் இறுதி மன்னன் (நாயக்கர் வம்ச) ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் 189 ஆவது நினைவு தினம் நேற்று முன்தினம் (30) மாலை 4 மணியளவில் தமிழக, வேலூர். பாலாற்றாங் கரையோரம் அமைந்துள்ள ஞாபகார்த்த முத்து மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மன்னனின் சாம்பல் அடக்கம் செய்யப்பட்ட நினைவு ஸ்தூபிக்கு பரம்பரை வாரிசுகள் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்

களுத்துறை சுழற்சி நிருபர்

Mon, 02/01/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை